உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் கலைவளவன் சான்றிதழ் படிப்பு
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும்.
மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்பை முடித்தால் 'மந்திரம் கலைவளவன்' என்கிற சான்றிதழ் வழங்கப்படும்.
மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும்.
மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும் படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும்.
இந்த படிப்புக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ2345ஆகும். மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ் படிப்பை நிறைவுசெய்ய பத்து நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு நிலைக்கு ஐந்து பாடங்கள் என பத்துநிலைகளில் படிப்பு தொடரும்.
நாங்கள் அனுப்பும் முதல் பாடத்தை படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையெழுதி அனுப்பியவுடன் இரண்டாவது பாடம் அனுப்பப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும், கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு, நீங்கள் விடையெழுதி அனுப்பியவுடன் மட்டுமே அடுத்தடுத்த பாடங்கள் அனுப்பி வைக்கப்படும்.
உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைய, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் படிப்புக் கட்டணம் ரூ2345ஐ kumarinadanr-1@oksbi என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பித்தர வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக